திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் தாய்ப்பால் வாரம் விழா திருவானைக்காவல் நகர்புற சுகாதார நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.
உலக தாய்ப்பால் வார தின விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருவானைக்காவல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டாடப்பட்டது 30 தாய்மார்களுக்கு சத்து மாவு மட்டும் நவதானியங்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.
தாய்ப்பால் வார விழாவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரேவதி அவர்கள் தாய் பால் ஊட்டுவது பற்றிவிழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கத்தின் சாசன தலைவர் முஹம்மது சபி முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் பிரசன்ன வெங்கடேசன், செயலாளர் லயன் ரெங்கராஜன், பொருளாளர் லயன் சரவணன், நிர்வாக அலுவலர் லயன் முகமது உமர் கத்தாப் ,இயக்குனர் லயன் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் லயன் ராஜு ஜோசப்,உறுப்பினர் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் லயன் மகேஸ்வரி மற்றும் தாய்மார்கள் நகர்புற சுகாதார அலுவலர், செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments