இன்று 14.07.2024 மாலை டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர கழக செயலாளர் மு. மதிவாணன் மற்றும் நடுவராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் " கலைஞரை உலகம் புகழ பெரிதும் காரணம்- எழுதுகோலே! செங்கோலே! என்ற தலைப்பில் உரையாற்றினார்.
எழுதுகோலே என்ற தலைப்பில் உரையாற்றியவர்கள் செந்தமிழ்ச்செல்வி திருமதி. தெ. சாந்தாமணி, சிந்தனைச்செல்வர் திரு. சிவசக்தி வடிவேல், சொல் அரசி பேராசிரியர் பர்வீன் சுல்தானா மற்றும் செங்கோலே என்ற தலைப்பில் உரையாற்றியவர்கள் கவிஞர் திரு. மதுக்கூர் ராமலிங்கம், முனைவர் திருமதி. எழிலரசி, நகைச்சுவை நயாகரா திரு. மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் S. பன்னீர்செல்வம், K. சண்முகம், V. தனசேகரன், U. ராஜேஸ்வரன், K. K. K. கார்த்தி MC., R. மணிமேகலை ராஜபாண்டி MC., திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர், பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கலந்து கொண்டனர்.
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments