திருச்சி பால்பண்ணை பஸ் ஸ்டாண்ட் முதல் திருவெறும்பூர் வரை தினமும் விபத்துக்கள் குறிப்பாக மாலை நேரங்களில் ஏற்படுவதை தவிர்க்க சேவை சாலை அமைத்து தர வேண்டி திருவெறும்பூர் சிபிஎம் விவசாய சங்க அமைப்பாளர் பழனிவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் .
திருமண மண்டபங்கள் ஷாப்பிங் மால்கள், பேக்கரி போன்ற கடைகள் முன்பு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன இதனால் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது .
திருச்சி மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி நிர்வாகம் ,காவல்துறை இது சம்பந்தமாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
மேலும் இந்த கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்யாவிட்டால் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
0 Comments