திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ச்செம்மல்" கவிஞர் கோவிந்தசாமி (தலைவர், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம்) அவர்களின் பவள விழாவை முன்னிட்டு வா மகனே வா, வித்தக விளக்கு, வென்று காட்டுவோம் என்று அவர் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார் . மத்திய அரசு தேர்வாணையத்தின் மேனாள் தலைவர் இரகுபதி நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் பின்னர் கவிஞர் கோவிந்தசாமி ஏற்புரை நிகழ்த்தினார் .
இந்நிகழ்ச்சிக்கு எராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் துணை தலைவர் இல .கணேசன் நன்றி கூறினார்.
******
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments