BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** மலைக்கோட்டை பகுதி தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதார உரிமை கோரி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி மேயரிடம் மனு !

ஆசிரியர் :


 

மலைக்கோட்டை பகுதி தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதார உரிமை கோரி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி மேயரிடம் மனு !

மலைக்கோட்டை பகுதி தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதார உரிமை கோரியும் திருச்சி பாபு ரோடு சாலையை உடனடியாக போடச் சொல்லியும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சவுக் கிளை நிர்வாகிகள் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனர்



மலைக்கோட்டை சுற்றியுள்ள தரைக்கடை வியாபாரிகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுமாறும் திருச்சி பாபு ரோடு மற்றும் EB ரோடு சாலையை இணைக்கும் பாபு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள சாலை பாதாள சாக்கடை பணிக்காக 2 ஆண்டுகளுக்கு மேலாக தோண்டப்பட்டு சீரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் பள்ளி குழந்தைகளும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இங்கு அருகில் மருத்துவனையும் உள்ளது.அங்கு வந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் சிரமமாக உள்ளது.எனவே சாலையை சீரமைக்க கோரி திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் சவுக் கிளை தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் திருச்சி மாநகராட்சி மேயர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில். துணை நிர்வாகிகள் முஸ்தபா, பிர்தோஸ், சம்சுதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் மைதீன், அபுதாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments