BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ராகுல் காந்தி சென்ற யாத்திரை வாகனம் மீது சரமாரி கல்வீச்சு!

ஆசிரியர் :


 

ராகுல் காந்தி சென்ற யாத்திரை வாகனம் மீது சரமாரி கல்வீச்சு!

 

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை தற்போது பீகார் மாநிலத்தில் வந்து கொண்டு இருக்கிறது. 



இன்று காலை பீகார்- மேற்கு வங்க எல்லையான மால்டா அடுத்த கட்டிகார் என்ற இடத்தில் யாத்திரை வந்தது. மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவரது யாத்திரை வாகனம் மீது சரமாரி கற்கள் வீசப்பட்டன. இதில் அந்த வாகனத்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. போலீசார் தலையிட்டு, கல்வீசியவர்களை விரட்டினர்.

Post a Comment

0 Comments