BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** 7பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர். !

ஆசிரியர் :


 

7பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர். !


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 393 மனுக்கள் பெறப்பட்டது.




பின்னர் வருவாய்துறையின் சார்பில், ஆலத்தூர் வட்டத்தைச் சார்ந்த 04 பயனாளிகளுக்கு இணையவழி இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 03 பயனாளிகளுக்கு இணையவழி இலவச நிலப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்துதுறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments