திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளினை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமையில் திருச்சி புத்தூர் வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், கிளை நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
0 Comments