சர்வதேச யோகா தினம், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழில்நுட்பக் கழகத்தின் பொன்விழா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா, கல்வித் தலைவர் (மாணவர்கள் நலன்) டாக்டர் குமரேசன், கல்வித் தலைவர் (முன்னாள் மாணவர்கள் மற்றும் சர்வதேச உறவுகள்) டாக்டர் சுப்பையன் ஆகியோருடன் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மண்டலப் பொறியியல் கல்லூரி/ திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
0 Comments