BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** டாஸ் அறக்கட்டளையின் பதிமூன்றாம் ஆண்டு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது !

ஆசிரியர் :


 

டாஸ் அறக்கட்டளையின் பதிமூன்றாம் ஆண்டு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது !

டாஸ் அறக்கட்டளையின் பதிமூன்றாம் ஆண்டு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. 



இந்த விழாவில்டாஸ் அமைப்பின் உறுப்பினர் திரு.ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரை அளித்தார். இந்த விழாவில் டாஸ் அறக்கட்டளையின் ஆலோசகர் டாக்டர். ரா.விக்டர் லாசரஸ் அவர்கள் சிறப்புரை அளித்தார். அதன் பின்பு மற்றொரு ஆலோசகரான டாக்டர்.பி.சுப்புரத்தின பாரதி அவர்கள் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்கள்.இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக இந்த ஆண்டு நம் சமூகத்தில் சிறப்பாக சேவை செய்த எண்ணற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள்.



 விருது பெற்றவர்களின் பெயர்கள்:


தினசேவை

மகிழ்வித்து மகிழ்

புது சுவாசம்

எட்டுத்திக்கும்

Time to Change

சுப்புராம்  அறக்கட்டளை 

Fema Trust

முகில் இளைஞர் நற்பணி மன்றம்

அக்னி சிறகுகள்

அப்துல் கலாம் இளைஞர் மன்றம்

மனிதம் 

மாறுவோம் மாற்றுவோம் 

ஹாப் அறக்கட்டளை

கன்மலை அறக்கட்டளை

Phoneix அறக்கட்டளை

டாஸ் அறக்கட்டளைக்கு ஆதரவு அளித்த தனி நபர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இறுதியில் செல்வி வி.சாய் கார்த்திகா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சி டாஸ் அறக்கட்டளையின் முதன்மை செயலாளர் திரு.கே. அருண் குமார் அவர்களால் இனிதே ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஜே.இனிகோ பாப்பு விநோதன், டாஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.வி.சாய் பிரஷாந்த், டாஸ் அறக்கட்டளையின் பொருளாளர் அறங்காவலர் திரு.வி.ந.ரா.ஸ்ரீபாலாஜி,  திருச்சி மாவட்ட செயலாளர் திரு. பி. விவேக் ராஜ் , டாஸ் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments