BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி மேலரன் சாலையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் !

ஆசிரியர் :


 

திருச்சி மேலரன் சாலையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் !

 திருச்சி மாநகர் மேலரன் சாலையில் மட்டக்கார தெருவில் எழுந்தருளி அருள் பாவித்து வரும் (500) ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலையத்தில் முப்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தேரோட்ட பெருவிழாவானது கடந்த ஒன்பதாம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி, அன்றைய தினம் முதல் சிவசுப்பிரமணிய சுவாமி பல்வேறு அழங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார் முக்கிய நிகழ்வாக திரு தேரோட்ட வைபவம் நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.




 சிறப்பாக அலங்கரிக்க பட்டிருந்த திருத்தேரில் சிவசுப்பிரமணிய சுவாமி  வள்ளி, தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து பூஜைகளுக்கு பின்னர் திருத்தேர் வடம் பிடித்தல் நடைப்பெற்றது.



 பெருந் திரலான பக்தர்கள், ஓம் முருகா அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தனர் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்த திருத்தேர் மீன்டும் நிலையை வந்தடைந்தது இன்று மாலை முத்து பள்ளாக்கு வைபவத்துடன் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நிறைவுப் பெருகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிவா குருக்கள் மீனாட்சி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்

Post a Comment

0 Comments