BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருமதி. கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் !

ஆசிரியர் :


 

திருமதி. கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் !

 திருமதி. கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் இந்த மாதக் கூட்டம் இன்று  மாலை SRC கல்லூரி அருகில், சங்கரன் பிள்ளை சாலையில் உள்ள சுருதி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவிஞர் வீ.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். திருமதி. செ.செசிலி வரவேற்புரை நிகழ்த்தினார். 








மாணவர் உரையாக மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு பயலும் மாணவி செல்வி இ.நஸ்ரின் காமராசர் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். 

மேலும் பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி செல்வி அ.நகோமி வாலியும் நானும் என்ற தலைப்பில் பாடலாசிரியர்,கவிஞர் வாலியின் பல பாடல்களை பாடி அதற்குரிய விளக்கங்களையும் கொடுத்து சிறப்பாக உரையாற்றினார். 

நவலூர் குட்டப்பட்டு அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், ஆங்கிலத்துறை பேராசிரியர் மு.ரஞ்சித் என்னுள் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். நன்றியுரை திரு. ர.பிரபு அவர்கள் நிகழ்த்தினார்.



 இக்கூட்டத்தில் தலைவர் தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, செயலாளர் பன்முகக் கலைஞர் லால்குடி த.முருகானந்தம், பொருளாளர் கவிஞர் க.மாரிமுத்து, மன்றப் பொறுப்பாளர்கள் திரு. நா. ரெங்கராசன், திரு.நா.பாலமுருகன், திரு. நா.கதிரவன், மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் டிரஸ்ட் திரு. பிச்சையா, தொழிலதிபர் கேசவன், பலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


***


L.பாபு

தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments