BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா !

ஆசிரியர் :


 

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா !

ஜூன் 26 உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ரோஜாவனம் டிரஸ்ட், ஜோதி டிரஸ்ட் மற்றும் பிடிஐ ஹேர் வாய்ஸ் நிறுவனம் இணைந்து  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தந்தை பெரியார் அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.06.24 நடைப்பெற்றது.




அரசு கலைக் கல்லூரி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றில் உள்ள மாணவர்கள் குழந்தைகள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு , பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி , கவிதைப்  போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் 450, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  Her Voice Foundation  திட்ட அலுவலர் கண்ணன் வரவேற்றார்.  தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மு.கூ.பொ) முதல்வர் முனைவர் வாசுதேவன் அவர்கள் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக சண்முகம் அவர்கள், ஸ்ரீ ஜெயசித்ரா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (கூ பொ), ஜெ.ஜெய்பேபி Her Voice Foundation இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள். 







அனைவரும் வருங்காலத்தில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கவும, இளைஞர்கள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கலைமாமணி பழனியாபிள்ளை மாநில ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்



*****


L.பாபு 

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments