திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது .
இந்த பேரணி திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானாவில் இருந்து TVS டோல்கேட் வரை நடைபெற்றது . பின்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலைக்கு பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார் .
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் , மாநகராட்சி வார்டு குழு தலைவர் மதிவாணன் , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் எராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர் .
***
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments