BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** சிறுவர்களுக்கான நினைவாற்றல் பயிற்சி !

ஆசிரியர் :


 

சிறுவர்களுக்கான நினைவாற்றல் பயிற்சி !

நேற்று 28.05.2024 மற்றும் இன்று 29.05.2024 திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நினைவாற்றல் பயிற்சி நிகழ்ச்சி இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில்  நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் திருச்சி திருவரங்கம் விவேகானந்தா யோகா முதன்மை பயிற்றுநர்கள் ஸ்ரீதர் , சந்தான கிருஷ்ணன், திருமதி. ரம்யா, திருமதி.  தீபா, திருமதி. சுஜாதா, திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார், வாசகர் வட்ட ஆலோசகர் திரு. அருணாச்சலம்  மற்றும் திருச்சி மாவட்ட நூலக அலுவலர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு   குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். 



மேலும் யோகாவின் மூலம் அனைவரின் ஆரோக்கியத்தின்  கோட்பாடுகளை  சிறப்பாக விளக்கி மற்றும் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில்  ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களுடன் வந்து பங்கேற்று கற்று பயனடைந்தார்கள்.





***

L.பாபு

திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments