கார்கில் போரில் வீர மரணம் அடைந்த திருச்சி மேஜர் சரவணன் அவர்களின் 25 ஆவது நினைவு தினம் இன்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளிக்கு அருகில் உள்ள அவரது நினைவு தூணிற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட கமிஷனர் சரவணன், திருச்சி மாவட்ட கமாண்டர் திரு. சுதீப் சேட்டர்ஜி, திருச்சி மேயர் அன்பழகன், பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, வழக்கறிஞர்கள் அந்தோணி, முத்து, பழனி, தர்மசேகர், கவிதா, கழகத் தொண்டர்கள், திருச்சி தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் திரு. சுனில் பட், மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு. செந்தில்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மறைந்த கார்கில் வீரர் சரவணன் நினைவு தூணிற்கு மரியாதை செலுத்தினார்கள்.
****
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments