திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளிக்கு ஐந்து மாணவர்கள் அமர்ந்து எழுதக்கூடிய இரும்பு மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார்.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர் தென்னூர் நடுநிலைப் பள்ளிக்கு ஐந்து பேர் அமர்ந்து எழுதக்கூடிய மேஜை மற்றும் இருக்கைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். முன்னதாக இடைநிலை ஆசிரியர் லாரன்ஸ் அமலின் சவரிராஜ் வரவேற்க, நிறைவாக ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.
0 Comments