தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு திருச்சி கலையரங்கம் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி .செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு சென்னை கடலூர் ஈரோடு அரியலூர் பெரம்பலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி ஆய்வக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments