ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் " மனிதச் சிறகுகள்" தனியார் தொண்டு நிறுவனத்தார் மூலம் பொருளாதாரம் சவாலான 60 மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் இலால்குடி வட்டாரக் கல்வி அலுவலர் பிரபு அவர்கள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.சாந்தி நாராயணசாமி முன்னிலை வகித்தார் .
AID INDA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜபாண்டியன் & மனிதச் சிறகுகள் நிறுவனத்தார் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன் , மற்றும் ஆசிரியைகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.
0 Comments