திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் , புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டதலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். இந்திய திருநாட்டின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் செப்டம்பர் 5 ஆகும். அந்நாள் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினரை சிறப்பானவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம் ஆகும். கற்பித்தலில் புதுமைகளை புகுத்தி இளைய சமுதாயத்தினரின் நலனுக்காக பாடுபட்டு வருகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
0 Comments