7.8.2022
ஒசூரில் நடைபெற்ற குளோபல் யோகா வேல்டு ரிக்கார்டு எனப்படும் யோகா உலக சாதனை நிகழ்ச்சிகளில் ஸ்டார் பிளாக் ட்ரேகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமியின் மாஸ்டர் கண்ணன் அவர்களின் சார்பாக திருச்சாபுரை சேர்ந்த கே. எஸ் . நிக்லேஸ் (7)மற்றும் பொய்யாமனியை சேர்ந்த பி. ஹரினி(14) , காவகாரபாலையத்தை சேர்ந்த எஸ். நித்யஸ்ரீ (14), ஜீயபுரம் என் . ஹரிசங்கர் (24) , ஆகியோர் கலந்து கொன்டு யோகா உலகசாதனை புரிந்தனர்.
அதில் திருச்சாபூரை சேர்ந்த கே.எஸ் . நிக்லேஷ் (7) குழு மற்றும் தனித்து என இறு வேறு யோகா உலக சாதனை படைத்ததில் அந்த அரங்கத்தில் பலரது கவனத்தை ஈர்க்கும் விதமாக படைத்து இரு வேறு பதக்கங்களை பெற்றார் குளோபல் வேல்டு ரிக்கார்டு தலைவர் இவர்களை பாராட்டி பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் , ஸ்டார் பிளாக் ட்ரேகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமி மாஸ்டர் கண்ணன் அவர்களுக்கு குளோபல் வேல்டு ரிக்கார்டுகான உயர்ந்த விருதான யோகி யோகா அவார்டு இந்த வருடத்திற்கான அவார்டை அதன் நிறுவனர் வழங்கி கவுரவபடுத்தி வாழ்த்து தெரிவித்தனர்
0 Comments