நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தன்.
அப்போது சுமார் 18 பயணிகளிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்கள் தங்கத்தை துகள்களாகவும், கட்டிகளாகவும், பசை வடிவிலும் மறைத்து கடத்தி வந்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்களை சுங்கத்துறையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.25 கோடி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் இன்று காலையும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments