BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்

ஆசிரியர் :


 

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 




தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், அக்கட்சியின் மேயா் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் வேட்புமனுவை மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுவை 45வது வார்டு திமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்மொழிந்திருந்தார், 39 வார்டு உறுப்பினர் சுரேஷ்குமார் வழிமொழிந்தார். 




மேயர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஜெகன் பெரியசாமி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மேயருக்கான ஆடை, 111 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் ஆகியவற்றை ஆணையா் வழங்கி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments