திருச்சி மருங்காபுரியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி விடியால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .
விடியல் கல்வி குழமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.தேவராஜ்,தலைமையில் நடைபெற்றது . விழாவில் கல்லூரியின் தாளாளர் ஷெர்லி தேவராஜ்,மற்றும் இயக்குனர் சதீஷ் தேவராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏவிகே சாந்தி, வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை வாசித்தார்,
சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.செல்வம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு கொடுத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கல்லூரி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் அமைந்துள்ளதாகவும் இங்கு அதிகமான ஏழை பிள்ளைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர் என்றும் பெருமிதத்துடன் கூறினார். கல்லூரி நிர்வாக அலுவலர் அராவமுதன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்,
0 Comments