BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100- நாள் வாசிப்புத் திட்டம் - தொடக்க நிகழ்வு & தேசிய அறிவியல் தினம் !

ஆசிரியர் :


 

எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100- நாள் வாசிப்புத் திட்டம் - தொடக்க நிகழ்வு & தேசிய அறிவியல் தினம் !

திருச்சி மாவட்டம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில்  100- நாள் வாசிப்புத்   திட்டம் - தொடக்க     நிகழ்வு & தேசிய அறிவியல்       தினம் ஆகியன விழாவாக இலால்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு பிரபு & திருமதி அருணா தேவி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது . 





AID INDIA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜ பாண்டியன்  வாசிப்பின் அவசியம் பற்றி விளக்கினார் .விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் உள்ளிட்ட ஆசிரியைகள் செய்தனர்.

பள்ளி மாணவர்கள் நூலகப் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது. விழாவில் இந்தாண்டு ONLINE PROJECT போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசுகளை பெற்ற டாரத்தி ஜோஸ்லின், சாதனா மற்றும் பிரதீப், தீபக் ஆகியோரையும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாழ்த்தி பாராட்டினர் .





இந்த " நெகிழி இல்லாத உலகம் " என்ற தலைப்பிலான போட்டிக்கு இணைச் செயல்பாடாக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளாக " தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு  ONLINE வகுப்பாசிரியர் பிந்து அவர்களின் உதவியால்  பனை ஓலையால் ஆனப் பொருள்கள்  வழங்கப்பட்டது . உடன் SMC தலைவி சத்யா, PTA தலைவி அபிராமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Post a Comment

0 Comments