இன்று 15.06.2024 காலை 8:30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள கோனார் சத்திரத்தில் திருச்சி தென்னூரில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவ மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் இணைந்து நடத்தும் முற்றிலும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த இலவச கண் மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் அனைத்து பொதுமக்களும் வயது வரம்பு இல்லாமல் கலந்துகொண்டு தங்களின் கண் குறைகளை மருத்துவரிடம் எடுத்துரைத்து, ஆலோசனைப்பெற்று கண்களின் குறைகளுக்கு நிவாரண வழிகளையும் மருத்துவரிடமிருந்து பெற்று சென்றனர். இந்த இலவச கண் மருத்துவ முகாமில் கடந்த முறை மருத்துவம் பெற்ற பொதுமக்களும் மறுபடியும் வந்து பரிசோதனை செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
இந்த முகாமில் மருத்துவர்கள், திருச்சி தென்னூர் இந்து மிஷன் மருத்துவமனையின் பணியாளர்கள் மிகப் பொறுமையுடனும் அக்கறையுடனும் பொதுமக்களுடன் அணுகி, குறைகளை கேட்டு கண் நோயாளிகளை மனமகிழ் உடன் அனுப்பி வைத்தனர் .
******
0 Comments