வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கழக முதன்மை செயலாளரரும் , நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேருவின் மகன் கே.என்.அருண் நேரு சென்னையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் இன்று வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் கதிரவன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், கே என் ரவிச்சந்திரன் உள்பட பலர் இருந்தனர் .
0 Comments