தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
0 Comments