BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்கு பாராட்டு!

ஆசிரியர் :


 

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்கு பாராட்டு!

 தருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் நக்கீரன் தமிழ் சங்கம் இணைந்து தமிழ் விழா 2023 நிகழ்ச்சியினை திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க மன்றத்தில் நடத்தியது. நக்கீரர் தமிழ் சங்கத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் புதுவை தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து உள்ளிட்டோர் சிறப்பு பாராட்டு பெற்றனர். 



மேலும் தமிழ் பணி மற்றும் சேவையை பாராட்டி உரிமைக் கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் குடும்ப சகிதமாக நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோருக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர். 

திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரி மேனாள் தமிழ் துறை தலைவர் செயலாளர் முனைவர் செயலாவதி, திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க துணை அமைச்சர் நாச்சிமுத்து, தமிழ்ச் செம்மல் கோவிந்தசாமி, முனைவர் திலகவதி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். நிறைவாக பேராசிரியர் பெருமாள் நன்றியுரையாற்றினர்.

Post a Comment

0 Comments