BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவியை வெட்டிகொன்ற கூலி தொழிலாளி !

ஆசிரியர் :


 

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவியை வெட்டிகொன்ற கூலி தொழிலாளி !

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28), ரகுநாத் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடு மேன்களாக பணியாற்றி வருகின்றனர்.இதில் அமர்நாத்துக்கு திருமணமாகி மாரியம்மாள் (25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர் . அமர்நாத் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனியாகவும், ரகுநாத் தனது தாய், தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.




இந்தநிலையில் ரகுநாத்திற்கு, தனது அண்ணியான மாரியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் செல்போன்களில் ஆபாச படங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. இதை அறிந்து அமர்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவியை கண்டித்தார். ஆனால் கணவரை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியதில் மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து வெட்டிய கத்தியுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.



Post a Comment

0 Comments