அக்டோபர் மாதம், உலகெங்கிலும் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, இந்த மாதம் முழுவதும் பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் ஒன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம், அக்டோபர் மாதம் முழுவதும் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று மார்பக புற்றுநோய் பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும். இந்த வாகனத்தில் பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு பயணம் செய்து, கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, விருப்பமுள்ள பெண்களுக்கு, அந்த நடமாடும் வாகனத்திலேயே இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனையை மேற்கொள்ளும்.
0 Comments