திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தாயாரின் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தொட்டியம் சரவணன், மருத்துவர் லூர்துசாமி, விஸ்வநாதன், வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments