திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள பாலத்துடன் கூடிய புதிய கதவணையைக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 26ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். இதையொட்டி முக்கொம்பு மேலணையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், முதல்வரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் . அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி மற்றும் மாநகர மேயர் அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
0 Comments