24.04.2022
திருவரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ சேவை மையத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு , திருச்சி மாநகர மேயர் அன்பழகன் , திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .
0 Comments