BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் !!!

ஆசிரியர் :


 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் !!!

 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் !





ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-ந் தேதி  வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் உற்சவத்தின் முதல் நாளான (9-ந்தேதி) அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர்லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

அங்கிருந்து இரவு 8.45க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் (10-ந்தேதி) அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

இரண்டாம் நாளான 10-ந்தேதி(திங்கள்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

திருவிழாவின் 3ம் நாளான 11-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 12-ந்; தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 13-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 14-ந் தேதி  காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளிகிறார். 16-ந் தேதி மாலை நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 




திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறும். வழக்கமாக இந்த உற்சவத்தின் போது  அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்தில்  கருட வாகனத்தில்  எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.  



Post a Comment

0 Comments