அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்க்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கலந்துகொண்டு மதுசூதனன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் என்.ஆர்.சிவபதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், சிறுபான்மை அணிச் செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 Comments