09.07.2021
பக்தர்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் என்ற தாங்கும் இடம் திருவானைக்கோவில் செக் போஸ்ட்டுக்கும் புதிய கொள்ளிடம் பாலத்திற்கும் இடையில் உள்ள சாலையில் அமைந்திருக்கிறது.
ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்குவதற்காக கார் ,வேன் மற்றும் பேருந்துகளில் வருகிறார்கள். யாத்ரி நிவாஸ் இங்கேதான் இருக்கிறது என அம்புக்குறி போடப்பட்ட விளம்பர பலகை தவறான இடத்தில் வைத்துள்ளார்கள். பாலாஜி அவென்யு என்ற பகுதிக்குள் செல்வதாக தவறாக காட்டுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வழிமாறி பாலாஜி அவென்யுவில் சென்றுவிட்டு திரும்பும் நிலை ஏற்படுகிறது .
இந்த வழிகாட்டி விளம்பர பலகையை அடுத்த சாலையில் சரியாக மாற்றி வைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்குமா???
0 Comments