சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (46) என்பவர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்தார் .
இமிகிரேசன் அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது போலியான பாஸ்போர்ட்டில் அஜ்மல்கான் செல்லவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவரது உண்மையான பெயர் அஜ்மல்கான் பிறந்த தேதி 21.03.1978 ஆனால் இதனை திருத்தம் செய்து அஸ்மல்கான் எனவும் பிறந்த தேதி 07.11.1980 எனவும் இருந்த போலி பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் சிக்கியது. அவரை பிடித்த இமிகிரேசன் அலுவலர்கள் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் . பின்னர் அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .
0 Comments