01.04.2022
அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பட்டு விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த வகையில் தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவு மானியம் ரூ.10,500/-ம், புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 இலட்சமும், புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52,500/-ம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் திருச்சி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் தொழி;ல்நுட்ப சேவை மையத்திற்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இதில் முதல் பரிசாக கொடுக்கூர் பட்டு விவசாயி செல்வகுமார் என்வருக்கு ரூ.25,000/-ம், இரண்டாம் பரிசாக வேம்புக்குடி விவசாயி கலியமூர்த்திக்கு ரூ.20,000/-ம், மூன்றாம் பரிசாக கண்டிராதித்தம் விவசாயி ஜெயபாலுக்கு ரூ.15,000/-ம் ரொக்கப்பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் தற்பொழுது பட்டுக் கூடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.750/-க்கு மேல் இலாபம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதற்கு சொட்டுநீர் பாசனம் சி;று, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசாயிகள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் தொழில் நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் திரு.கே.மணிகண்டன், இளநிலை ஆய்வாளர் திருமதி.வி.ஜோதி, பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments