29.07.2021
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று
காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். காவல்துறையினர் உயிரோடு குழந்தையை குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்ற நபர் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments