25.03.2022
எய்டு இந்தியா (AIDINDIA) & ஈவித்யலோகா அமைப்பின் மூலம் ரூபாய் 150000 மதிப்புள்ள நுலக புத்தகம் மற்றும் கற்றல் எழுதுபொருட்கள் திருமண மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் AIDINDIA & ஈவித்யலோகா அமைப்பு மூலம் 1,25,000/- மதிப்புள்ள 1000 புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இலால்குடி மாவட்ட கல்வி அலுவலர் திரு.அம்பிகாபதி , வட்டார கல்வி அலுவலர் திரு.பிரபு,DI- வீரமணி. ITK இலால்குடி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.இளம்சேட்சென்னி, திருச்சி AIDINDIA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அவ.இராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் 90 மாணவ மாணவிகளுக்கு கற்றல் ₹35,000 மதிப்புள்ள எழுதுப் பொருட்கள் வழங்கி மாணவர்கள் இடையே நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் விளக்கி கூறினார். திருமதி.தெய்வநாயகி தலைமை ஆசிரியர் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments