26.07.2021
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தனியார் மகளிர் சுய உதவி
குழுக்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டித்தும் , அவகாசம் வழங்க கோரியும் மாவட்ட
ஆட்சித்தலைவர் இது சம்பந்தமாக அறிக்கையை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் மக்கள் அதிகாரம் தோழர்ஆனந்த்~ மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் லதா~ மக்கள் உரிமை கூட்டணி
காசிம் ~மற்றும்
சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று அறிக்கை வெளியிடுவதாக
உறுதியளித்ததோடு மேலும் அட்டூழியம் செய்யும் சுய உதவிக்குழு நிறுவனங்கள் மீது
காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கி
கொண்டார்கள்.
0 Comments