தூத்துக்குடி மண்டல அதிமுக போக்குவரத்து பிரிவு புதிய நிர்வாகிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மண்டல அதிமுக போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் தேர்தலுக்கான விருப்பமனுக்களை தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தேர்தலுக்கான விருப்பமனு படிவம் வழங்கப்பட்டது. அதில் 7 போக்குவரத்து கிளைகளுக்கும் தூத்துக்குடி மண்டல அதிமுக போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தேர்வு செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பார்வைக்கு அனுப்பப்பட்டன. அதில் கீழ்கண்ட தூத்துக்குடி மண்டல அதிமுக போக்குவரத்து பிரிவுவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தனர்.
தூத்துக்குடி மண்டல விபத்துப் பிரிவு சட்ட ஆலோசகராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சேகர் மண்டல விபத்துப் பிரிவு செயலாளராக திருச்செந்தூர் பணிமனை நடத்துனர் வேல்பாண்டி தூத்துக்குடி மண்டல தலைவராக ஸ்ரீவைகுண்டம் பணிமனை ஓட்டுநர் எட்வர்ட் அந்தோணிராஜ் துணைத் தலைவர்களாக ராமசாமி தூத்துக்குடி புறநகர் பணிமனை ஓட்டுநர், ஸ்ரீவைகுண்டம் பணிமனை பார்வதி மண்டல செயலாளராக தூத்துக்குடி நகர் பணிமனை நடத்துநர் கல்விக்குமார் இணைச் செயலாளர்களாக தூத்துக்குடி புறநகர் பணிமனை ஓட்டுநர் லெட்சுமணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர் .
----------------
Dகனகராஜ் தூத்துக்குடி
0 Comments